பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

இன்று(திங்கட்கிழமை) முதல் பணியிலிருந்து விலகியிருக்க தபால் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் தபால் நிலையங்களில் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தே பணியிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தபால் திணைக்களத்தில் 25,000 பேர் பணியாற்றுகின்றார்கள்.

நிலவுகின்ற சூழ்நிலை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. அரச பணியாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் நிபந்தனைகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஊழியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன.

பணியாற்றுபவர்கள் தொற்றுக்கு உள்ளாவதற்கு நாங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம். இவர்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

உரிய முறையில் பாதுகாப்பு நடைமுறைகள் உறுதிப்படுத்தப்படாமையினால் நாங்கள் சேவையிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.