பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதுடன் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பதற்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் காலம் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.