யாழில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 68 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் கொழும்பு வாழைத் தோட்ட பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டு பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருப்பவர் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் நேற்று (புதன்கிழமை) 68 பேருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 8 பேர், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு 3 பேர், பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் 45 பேர், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் 9 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் மற்றும் ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையில் ஒருவர் என 68 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 45 பேருக்கு பரிசோதிக்கப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.