பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மற்றுமொரு மனுத் தாக்கல்!

பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நேற்று(புதன்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்குள் மீள கூட்டப்பட வேண்டும் என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவும் சூழலில் பொதுத்தேர்தலை நடத்துவதனூடாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என்பதால், பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள், ஜனாதிபதி சார்பில் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் இவ்வாறு மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.