255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில் – 135 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 835 பேரில் தற்போது 571 நோயாளிகள் 07 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 118 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 47 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 85 பேரும், இரணவில வைத்தியசாலையில் 13 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை பொது வைத்தியசாலையில் 192 பேரும், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 57 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 135 பேர் 24 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.