யானை மின்வேலியில் சிக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானைகளின் தொல்லையால்  அப்பகுதியைச் சுற்றி யானை மின்வேலி  பொருத்தப்பட்டிருந்த நிலையில் கடைக்குச் சென்ற சிறுவன் மின் வேலியில் மோதியதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் திருகோணமலை, மொரவெவ, வில்கம் விகாரை பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் 10ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 08 வயதுடைய கவிஷ்க தெனித் சஞ்ஜீவ என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் யானை மின்வேலியில் மோதியதையடுத்து 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளார் என்று மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.