அதிவேக வீதிகளை 11இல் திறக்க முடிவு

வாகனப் போக்குவரத்துக்காக அதிவேக வீதிகள் நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக  நெடுஞ்சாலை, வெளிப்புற சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.