காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பினர்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 பேரில் 55 பேரே குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியேறியுள்ளனர்.

அத்துடன் ஏனைய 7 பேரும் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருவதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 62 பேரும் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வைத்தியப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.