தன்னுடன் பயணித்த நண்பன் விபத்துக்குள்ளாகி வீதியில் வீழ்ந்து கிடக்க, அப்படியே போட்டு விட்டு சென்ற சகா! வாழைச்சேனையில் சம்பவம்…

இரு நண்பர்கள் ஒன்று சேர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞன் ஒருவன் பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் வைத்தே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்களும் வீட்டாருக்குத் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் பின் பக்கத்தில் இருந்து சென்ற இளைஞன் விபத்துக்குள்ளாகி காயங்கள் அடைந்த நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

விபத்தில் காயப்பட்டவரை அவ்விடத்திலே அவரது நண்பர் விட்டுச் சென்ற போது, பொதுமக்கள் சிலரின் உதவியுடன் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நண்பனின் தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரின் தந்தை ஆகியோர்களுக்கு பயந்து விபத்துக்குள்ளானவரை விட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.