வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மேலும் 129 பேர் விடுவிப்பு

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இன்று (புதன்கிழமை) 129 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர். பரிதோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 129 பேர் இன்றைய தினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருணாகலை, மொனராகலை, கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 192 பேர் பேருந்துகளின் மூலம் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் அழைத்துசெல்லப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 161 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 31 பேர் குறித்த முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.