வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது.

தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் மற்றும் லொறியும் மோதுண்டு விபத்துக்குள்ளாது.

கனராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள S வடிவ பாதையடியில் இவ் விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த கனகராயன்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் கடற்படையினரின் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்துள்ளதுடன் பட்டா ரக வானத்தின் முன்பகுதியும் , லொறியின் முன்பகுதியில் சிறிய இடமும் சேதமடைந்துள்ளதுடன் எவ்வித உயிராபத்துகளும் இடம்பெறவில்லை 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.