ஒருபுறம் கொரோனா! மறுபுறம் டெங்கு!! – பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காணப்படும் இவ்வேளையில், டெங்கு நோய் தொடர்பிலும் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம் என்று டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் அநுர ஜயசேகர தெரிவித்தார்.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால், கொரோனா நோயாளர்கள் சேர்க்கப்படும் கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் ஒரு பகுதியை அவர்களுக்காக ஒதுக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.