நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர்களில் கொலை, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், திருட்டு மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.