வன்னி மண்ணில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கைக்குழந்தைகளுடன் அவதியுறும் பெண்கள்- அவலம் நீங்குமா?

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்முகமாக அரசாங்கம் மேற்கொண்ட ஊரடங்குச் சட்ட நடைமுறை எமது நாட்டில் கொரோனா தொற்று பரவலை பாரிய அளவுக்கு குறைத்தது என்பது உண்மையே.

ஆனாலும், இவ்வாறான சட்ட நடைமுறைகள் வறுமையையும் பசியையும் குறைக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஊரடங்கு நடைமுறை இலங்கையில் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரத்தையே முற்றாக கேள்விக்குறியாக்கிய நிலையில் நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடும் வறுமைக் கோட்டுக்குக் உட்பட்ட குடும்பங்களின் நிலை பெரும் அவலமாகவே அமைந்துள்ளது.

இவ்வாறான நிலையிலும் ஒரு நேர உணவிருந்தாலே போதும் என்ற மன நிறைவுடன் ஊரடங்கு நிலையைக் கடந்த சில குடும்பங்களே இவை. இந்தக் குடும்பத்தினர் யாரும் மிகவும் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இல்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.