எதிர்ப்புக்கு மத்தியிலும் கூட்டமைப்பால் வேலணையில் முள்ளிவாய்க்கால் நினைவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று வழமை போல் வேலணை பிரதேச சபை முன்றலில் உள்ள நினைவிடத்தில் நினைவு கூர ஏற்பாடகியிருந்தும்
நூற்றுக்கு மேற்பட்ட இராணுவம் பொலீஸசார் நினைவிடத்தை சூழ குவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்த தடைவிதித்ததனாலும் இராணுவ பொலீசாரின் குவிப்பினால் பல உறுப்பினர்கள் வருகை தராததினாலும் வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினளான கருணாகரன் நாவலன் ( புங்குடுதீவு ) அன்ரனி அமிர்நாதர் மேரி மற்றில்டா ( மண்டைதீவு ) , சுவாமிநாதன் பிரகலாதன் ( மண்கும்பான் ) மற்றும் மாவீரர்களின் பெற்றோர் சகிதம் ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக பொலீஸ் இராணுவத்துடன் தா்க்கப்பட்டும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தடுத்ததினால் நினைவிடத்திற்கு அருகில் உள்ள முருகன் கோவில் முன்றலில் காலை 11 மணியளவில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியிருந்தார்கள் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.