992 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 559 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 424  நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 149 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.