மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்!

இடைநிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளை(புதன்கிழமை) முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வாரநாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 வரை சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும், முன்கூட்டியே தொலைபேசி மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனப் பதிவு, சாரதி அனுமதிப்பத்தரங்களை வழங்குதல், வாகன இலக்கத் தகடுகளை வழங்குதல், வாகனங்களைப் பரிசோதித்து அறிக்கைகளை வழங்குதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில், உரிய திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.