போகம்பறை சிறைச்சாலையில் கைதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை!

விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்களை தனிமைப்படுத்துவதற்காக போகம்பறை சிறைச்சாலையை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படும் நபர்கள் 21 நாட்களுக்கு அங்கு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூசா மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளிலேயே தற்பாது கைதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த வாரம் முதல் கைதிகளை தனிமைப்படுத்தப்படுத்துவதற்கான முகாமாக போகம்பறை சிறைச்சாலை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய அங்கு 500 கைதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் பந்துல ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.