மங்கள சமரவீரவிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை

சுமார் 05 மணிநேர விசாரணைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாவது தடவையாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சி.ஐ.டி.யில் முன்னிலையாகியிருந்தார்.

இந்நிலையில் சுமார் 5 மணி நேர வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் மங்கள சமரவீர, குற்றப்புலனாய்வுத் திணைக்கள வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இம்மாதம் 14 ஆம் திகதியும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சி.ஐ.டி.யில் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற காலத்தில் மங்கள சமரவீர நிதி அமைச்சராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.