குவைத்திலிருந்து விசேட விமானம் ஊடாக 300 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டனர்!

இலங்கையர்கள் 300 பேருடன் குவைத்திலிருந்து விமானமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

நேற்று(செவ்வாய்கிழமை) இந்த விமானம் இலங்கையினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கித்தவித்த 300 இலங்கையர்களே அவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைத்திற்கு சொந்தமான குவைத் எயார்வேஸ் விசேட விமானத்தின் மூலமே இவர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்துவரப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.