நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு

னாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேன்முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்டமாக 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

இதனடிப்படையில் சாளம்பைக்கேணி 3 இல் குறித்த நிகழ்வு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சாளம்பைக்கேணி கிராம சேவை உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு முன்னெடுத்தனர்.

இதன்போது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் வழிகாட்டலில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளில் குறித்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் , சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றி மேற்பார்வை செய்தனர்.

மேற்குறித்த திட்டமானது அம்பாரை மாவட்டத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு என்பதுடன் இதனூடாக மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி முத்திரை பெறுவோர் மற்றும் சமுர்த்தி முத்திரைக்கு தகுதியானோர், தொழில் பாதிப்பு, மேன்முறையீடு பட்டியலில் மூலம் தெரிவு செய்யப்பட்ட 1 இலட்சத்து 73 ஆயிரத்து 368 குடும்பங்களுக்கு 86 கோடியே 68 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.