கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.