கந்தளாய் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு…

எப்.முபாரக்  2020-05-20
கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைளுக்கு உதவியாகவும் இதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மருந்து தொளிக்கும் இயந்திரம்,  முகக்கவசம், காலனி  உள்ளிட்ட பாதுகாப்பு அணிகலன்கள் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரியிடம்  திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பினால் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பொருட்களை யூ என் வி நிறுவனம் மற்றும் அல்ஹித்மத்துல் உம்மா நிறுவனம் ஆகியவற்றினால்  அன்பளிப்பு  இன்று(20) செய்யபட்டன.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் அல்ஹித்மத்துல் உம்மா நிறுவன பணிப்பாளருமாகிய பாத்திஹ் கஸ்ஸாலி, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr.அஜித் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.