இலங்கையில் கொரோனா: 584 பேர் குணமடைவு! 434 பேர் சிகிச்சையில்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569 இலிருந்து 584 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,027 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 434  நோயாளிகள் 08 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் 90 பேரும், பொலனறுவை – வெலிக்கந்தை ஆதார மருத்துவமனையில் 37 பேரும், கொழும்பு கிழக்கு – முல்லேரியா ஆதார மருத்துவமனையில் 56 பேரும், சிலாபம் – இரணவில மருத்துவமனையில் 05 பேரும், மட்டக்களப்பு – காத்தான்குடி ஆதார மருத்துவமனையில் 28 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை பொது மருத்துவமனையில் 156 பேரும், ஹோமாகம ஆதார மருத்துவமனையில் 14 பேரும், மினுவான்கொடை ஆதார மருத்துவமனையில் 48 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மேலும் 112 பேர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 22 வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.