மாளிகாவத்தையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில், நேற்று (வியாழக்கிழமை) நபர் ஒருவரினால் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்,  04 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நிதி விநியோகம் செய்த குறித்த வர்த்தகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.