கிளிநொச்சியில் பொலிஸ் விடுதி மீது மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறுப்பட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திலுள்ள மாமரம் ஒன்று பொலிஸார் தங்கும் விடுதி மீது முறிந்து விழுந்துள்ளது.

இதன்போது கிளிநொச்சி இராமநாதபுரத்தில் பணிபுரியும் பிரஜீவன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அதே விடுதியில் தங்கியிருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லையென்பத குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.