கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 16 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 13 கடற்படையினர் உள்ளடங்கும் நிலையில், குணமடைந்த மொத்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 பேரினால் அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா நோயாளிகளாக இதுவரை 1055 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 426 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.