ரஷ்யாவில் சிக்கித்தவித்த 260 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கித்தவித்த 260 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 260 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து, பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.