வவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 40க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மூலம் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமில் 174 கடற்படை உத்தியோகத்தர்களும் பெரியகட்டில் அமைந்துள்ள இராணுவ முகாமில் 102 கடற்படை உத்தியோகத்தர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 500 ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கோரோனா தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைய வெலிசறை கடற்படை முகாமினை சுத்தப்படுத்துவதற்காக குறித்த முகாமிலிருந்து 276 கடற்படை வீரர்கள் வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.