26 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை!

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை 26 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சேவை கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து வீதிகளின் ஊடாக கொழும்புக்கு வரும் பஸ்கள் கொழும்புக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • கண்டி வீதியினூடாக வரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நிட்டம்புவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • மார்க்க இலக்க 5 இன் ஊடாக பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலாக பேருந்துகள் மினுவாங்கொடை வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • காலி வீதியினூடாக வருகைதரும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் பாணந்துறை வரை மாத்திரமே சேவையில் ஈடுபடும்.
  • அவ்வாறே அவிசாவளையினூடாக கொழும்புக்கு பயணிக்கும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் அவிசாவளை வரை மட்டுப்படுத்தப்படும்.
  • அதேபோல அநுராதபுரம் புத்தளம் மற்றும் குளியாப்பிட்டியிலிருந்து நீர்கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் நீர்கொழும்பில் நிறுத்தப்பட வேண்டும்.
  • அவ்வாறே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக வரும் பேருந்துகள் கொட்டாவ வரை மாத்திரமே பயணிக்க முடியும்.
  • இந்த பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணமானது குறித்த பேருந்து நிறுத்தப்படும் இடம் வரை மாத்திரமே அறவிடப்பட வேண்டும்.
  • இந்த பேருந்துகளின் முன்பக்கத்தில், குறித்த பேருந்து நிறுத்தப்படும் இறுதி இடம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
  • அவ்வாறே சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய, அனைத்து பயணிகளும் கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் உரிய பொது சுகாதார விதிகளை பின்பற்றுமாறு போக்குவரத்து அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
  • இதேவேளை, பேருந்துகளுக்கான அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 ஆம் திகதி வரை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நீடித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.