குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1090 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 407 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.