வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார்.

வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான குறித்த சிறுவன், நீர் நிறைந்த கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிதம்பரபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.