மேலும் 11 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,117

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அவர்களில் 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என்றும் 05 பேர் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 12 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்று மட்டும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 423 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.