கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வேகமாகப் பரவியதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு உத்தரவை மீறிய 64 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் ஊரடங்கு உத்தவை மீறி பயணித்த 18 ஆயிரத்து 169 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.