ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

ரஷ்யாவில் இருந்து ஏற்கனவே 261 பேர் கடந்த 22 ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர் என்பதோடு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1Share

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.