அனுமதி கிடைத்து 12 மணித்தியாலத்திற்குள் விமானநிலையம் திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்து 12 மணித்தியாலத்திற்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளிற்காக தற்போது காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்ததும், விமானநிலையத்தை முழுமையான செயற்பாடுகளிற்காக திறக்குமாறு பணியாளர்களிற்கு உத்தரவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்பான நாடு என கருதும் பல வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.