பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5000 பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினத்தில் கொழும்புக்கு வருகைத்தர 27 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.