கொரோனா நிவாரண பணி: அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பு

அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொரோனா நிவாரண பணியினை இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளன.

இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 123 குடும்பங்களுக்கான சுமார் 1500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி உலர் உணவு பொதியில் மரக்கறி உள்ளடங்கலாக அரிசி, சீனி, உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

அத்துடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மணல்சேனை கிராமத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலத்தில் அறுவடை செய்யப்பட்டு, சந்தைப்படுத்தப்பட முடியாத மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டு, இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகத்தின் தலைவர் பொறியியலாளர் ராஜமோகன் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இதற்கான ஏற்பாடுகளை இப்பிரதேசத்தின் கிராமசேவகர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.