அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து, திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து புதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.