கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 712 பேர் குணமடைந்திருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 20 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 577 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.