கொரோனாவிலிருந்து மேலும் 13 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய இதுவரை 745 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 1469 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 714 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.