ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் பிரதி சபாநாயகர், முன்னாள் குழுக்களின் பிரதி தவிசாளர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் பூதவுடலை நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்துக்கு அரச மரியாதையுடன் கொண்டுசென்றனர்.

அதன்பின்னர் அன்னாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாடாளுமன்றத்தை சூழ வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், சுகாதார நடைமுறை மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றியே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.