வடமராட்சி குண்டு வெடிப்பு – துன்னாலையை சேர்ந்தவர் ரி.ஐ.டியால் கைது!

வடமராட்சி கிழக்கு வல்லிபுரப் பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று(வியாழக்கிழமை) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை குடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்