கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல்  நாளைமறுதினம் அதிகாலை 3 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, 2, 3, 7, 8, 9, மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், கொழும்பு 1 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாளிகாகந்த வரையிலான நீர் விநியோக கட்டடைப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.