யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் முகமாக இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக் குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைபற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என ஆராயப்பட்டது.

குறிப்பாக கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிராமமாக மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவ்வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போது எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரி நிற்கின்றோம்.

முக்கியமாக காணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் காணியை முறைப்படி அதாவது பற்றைகளை வெட்டி அகற்றி அதற்குமேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள் சிரட்டை, பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக காணப்படுகின்றது.

அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய கடப்பாடும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் தற்பொழுது கொவிட்19 இற்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது ஆகவே இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இந்த டெங்கு தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வாரமொன்று எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது கிராம மட்டம் பிரதேச மட்டம் மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.