கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரையில் 754 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை ஆயிரத்து 530 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 766 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.