வவுனியாவில் இருவேறு கத்திக்குத்து சம்பவங்கள்: பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர்.

இதேவேளை அலகல்லு பகுதியில் இடம்பெற்ற கத்திகுத்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.