கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் மீண்டனர்

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து 781 பேர் வெளியேறியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,558 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.