கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு தள்ளுபடி!

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆலய வழக்கு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணை செய்ய விஷேடமாக பொறுப்பளிக்கப்பட்ட நீதிபதி த.கருணாகரன் வழக்கை விசாரித்து மனுவில் உள்ள குறைபாடு காரணமாக வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

ஆலயம் சார்பாக சட்டத்தரணிகளான ந.சிவரஞ்சித் மதிவதணன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் மன்றில் ஆஜராகியிருந்தார். இவ்வாலய வழக்கில் பிரதான சட்டத்தரணி சிவரஞ்சித்துடன் சட்டத்தரணி ,ஆர்திதகா, மதிவதணன் ஆகியோர் பல வழக்குகளில் ஆஜராயிருந்தார்கள். பிரதேச செயலகத்தில் நீண்டகாலமாக ஊழியர்களால் வழிபட்டு வந்த இவ்வாலயம் சட்ரீதியற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் வழக்கு தாக்கல் செய்திருந்தார் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றுவந்திருந்தன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.