ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தன்னாட்சி சுயாட்சி கொண்ட ஒரு நிர்வாக கட்டமைப்பினையே தமிழர்கள் கோருகின்றனர் என்றும் கூறினார்.

சந்திரிகா மையார் முன்வைத்த முன்மொழிவுகளை ரணில் விக்ரமசிங்க அன்று கிழித்தெறிந்திருக்கவிட்டால் இன்று நல்ல தீர்வொன்று கிடைத்திருக்கும் என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.